பொன்னமராவதி,ஏப்.16: பொன்னமராவதி தாலுகாவில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது. வரும் 18ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட பொன்னமராவதி, திருக்களம்பூர், வார்பட்டு,தூத்தூர், மூலங்குடி, ஒலியமங்களம், ஆவாம்பட்டி, உசிலம்பட்டி, மேலத்தானியம், சடையம்பட்டி, மறவாமதுரை, அரசமலை, ஆலம்பட்டி, கொன்னையம்பட்டி, காரையூர் உட்பட பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வீடு விடாக சென்று பூத் சிலிப் வழங்கினார்கள்.